Looks like you've blocked notifications!
'திருந்தி வாழ ஆசைப்படுகிறேன்'... போலீஸ் விசாரணையில் ரவுடி பினு உருக்கம்!

போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த பினுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் பினு கூறியதாவது:

 

நான் பெரிய ரவுடி இல்லை. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் திருந்தி வாழ ஆசைப்பட்டு கடந்த 3 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து வந்தேன். என்னுடைய 50-வது பிறந்தநாளைக் கொண்டாட கரூரில் இருந்து எனது தம்பி என்னை வற்புறுத்தி அழைத்து வந்தான்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

பினுவை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

BY MANJULA | FEB 13, 2018 2:45 PM #BIRTHDAYPARTY #BINU #பிறந்தநாள்கொண்டாட்டம் #பினு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People