'தோனி இந்தியாவின் பிரதமரானால்'.. பிரபல இயக்குநர் ஆசை!
Home > News Shots > தமிழ்By Manjula | May 28, 2018 03:45 PM

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு சென்னையின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்சன் 117 ரன்கள் எடுத்து உறுதுணையாகத் திகழ்ந்தார்.
மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த சென்னை கேப்டன் தோனிக்கு, தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.இந்தநிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தோனி இந்தியாவின் பிரதமரானால் எப்படி இருக்கும்? என, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தோனி என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்? மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத தூயவர்.அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்” என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'அடுத்த வருடம் கடும் போட்டியாளராக இருப்போம்'.. சென்னையை வாழ்த்திய ஹைதராபாத்!
- வாரிசுகளுடன் 'வெற்றியை' கொண்டாடிய சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.. வீடியோ உள்ளே!
- 'குருதியில் மஞ்சளேந்தி கோப்பை வென்றோம்'.. சென்னையை வாழ்த்திய பிரபலம்!
- IPL 2018 Final: CSK scripts the best comeback ever!
- சன்ரைசர்சை 4-வது முறையாக வீழ்த்தி.. 3-வது முறையாக கோப்பை வென்றது கிங்ஸ்!