
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கான தண்ணீரைக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் தற்போது அறிவித்துள்ள 177.25 டிஎம்சி தண்ணீரையாவது முழுவதுமாக திறந்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காவிரி தாயின் கருணை தமிழகத்திற்கு நிச்சயம் கிடைக்கும் என்றும், காவிரி பிரச்சினையை அரசியலாக பார்க்காமல் விவசாயம் சார்ந்து பார்க்க வேண்டும் என்றும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
BY SATHEESH | FEB 16, 2018 1:27 PM #SC #KAVERI #காவிரி #CHENNAI #சென்னை #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories