'அவரவர்கள் வேலையைப் பார்ப்பது நல்லது'.. ரோஹித் சர்மா காட்டம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 21, 2018 11:46 AM

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவுக்கு யோ-யோ டெஸ்ட் நடத்தப்படாமல் இருந்தது. இதனால், முகம்மது சமி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை போல ரோஹித் சர்மாவும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம் எனவும், அவருக்கு பதிலாக ரகானேவை மாற்று வீரராக தயார் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட யோ-யோ டெஸ்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எங்கே போயிருந்தேன், எங்கு நேரத்தை செலவிட்டேன். ஏன் குறிப்பிட்ட நாளில் யோ-யோ தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை. அது எனது சொந்த விவகாரம்.
அவரவர்கள் வேலையைப் பார்ப்பது நல்லது. ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்வது எப்போதுமே நல்லது அல்லவா?,'' என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.


RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
