Looks like you've blocked notifications!
பணமில்லாததால் 'இறந்த மகனின்' உடலை தானமாகக் கொடுத்த தாய்!

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டார் பகுதியை சேர்ந்த பாமன் என்பவர் மீது கடந்த 15-ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாமனை உடனடியாக அருகிலிருந்த ஜக்தல்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு சிகிச்சை பலனின்றி பாமன் உயிரிழந்தார். ஆனால் இறந்த பாமனின் உடலை சொந்த கிராமத்துக்குக் கொண்டு செல்ல, அவரது அம்மாவிடம் பணமில்லை.இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பாமனின் தாய் அழ ஆரம்பித்தார்.

 

இதனைக்கண்ட, அந்த மருத்துவமனையின் பிணவறை பொறுப்பாளர் பணமில்லை என்றால், உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாகக் கொடுங்கள் என்று கேட்டாராம். இதனைத் தொடர்ந்து மகனின் உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக அந்த ஏழை தாய் கொடுத்திருக்கிறார்.

BY MANJULA | FEB 17, 2018 3:33 PM #LASTRITE #CHHATTISGARH #இறுதிச்சடங்கு #சத்தீஸ்கர் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People