
தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பேர் ஏர்செல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏர்செல் சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை. ஏர்செல் சேவை முடங்கியதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும், தங்கள் பகுதிகளில் உள்ள ஏர்செல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் வாடிக்கையாளர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை ஏர்செல் வாடிக்கையாளர்கள் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் போல, புதுச்சேரியிலும் ஏர்செல் நெட்வொர்க் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 21, 2018 5:24 PM #AIRCEL #TAMILNADU #ஏர்செல் #தமிழ்நாடு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories