
நேற்று இரவு, சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு போன் செய்த மர்ம நபர்கள், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து, வெடிகுண்டை செயலிழக்கும் கருவிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். இறுதியில், வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி, புரளி என தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணையைச் சேர்ந்த சக்தி சரவணன் மற்றும் தீபானந்த் என தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
BY SATHEESH | MAR 19, 2018 11:31 AM #CHENNAIAIRPORT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories