
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கடந்த 2007- ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.
இந்த வழக்கில் அனைத்து கட்ட விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தண்ணீரின் அளவைக் குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 16, 2018 11:31 AM #CAUVERYVERDICT #SUPREMECOURT #TAMILNADU #காவிரிதீர்ப்பு #உச்சநீதிமன்றம் #தமிழ்நாடு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories