
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 11,300 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம், இந்தியளவில் மிகப்பெரிய விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் நீரவ் மோடி இந்த மெகா மோசடியை நிகழ்த்தியுள்ளார். இந்த நிலையில், மும்பையில் உள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் வீட்டுக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.
இதற்கிடையில் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாகக் கூறப்படும் நீரவ் மோடி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
BY MANJULA | FEB 15, 2018 7:04 PM #NEERAVMODI #PUNJABNATIONALBANK #நீரவ்மோடி #பஞ்சாப்நேஷனல்வங்கி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories