
இன்று காலை உடல்நலக்குறைவால் காலமான, சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான, ம.நடராஜன் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா.
அந்த இரங்கல் செய்திக்குறிப்பில், மறைந்த ம.நடராஜன் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்களுக்கு வலுசேர்த்தவர் என்றும், அவர் நினைத்திருந்தால் அரசியலில் உச்சத்திற்கு வந்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ம.நடராஜனின் வழிகாட்டுதலில் தான் முப்பது ஆண்டு காலமாகத் தமிழ்நாடு இயங்கியது எனவும், அவருடைய இறப்பு தன் ஆணிவேரையே அசைத்து விட்டதாகவும், பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
BY SATHEESH | MAR 20, 2018 4:25 PM #MNATARAJAN #BHARATHIRAJA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories