
நியூசிலாந்து நாட்டில் ஃபோர்ட் டிராபிக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் போட்டியின் 19 வது ஓவரில் பவுலர் ஆண்ட்ரூ எல்லிஸ் பந்துவீச வந்தார்.
இந்த ஓவரை, எதிர்கொண்ட ஆக்லாந்து பேட்ஸ்மேன் ஜீத் ராவல் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து 2-வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பும் முனைப்புடன் ஜீத் ஓங்கி அடிக்க, அது நேராக எதிரில் நின்ற பவுலர் எல்லிஸ் தலையில் பட்டு சிக்சருக்குப் பறந்தது.
இதனைத் தொடர்ந்து, பவுலர் எல்லிஸ் தனது தலையில் பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் பரிசோதனையில் ஆபத்து எதுவுமில்லை என்றவுடன், பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கையும் எல்லிஸ் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 22, 2018 11:08 AM #CRICKET #NEWZEALAND #கிரிக்கெட் #நியூசிலாந்து #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories