
ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால், வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், ரூ.15500 கோடி கடன் ஏற்பட்டதால் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக்கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் மனு தாக்கல் செய்துள்ளது.
வங்கிகளில் வாங்கியிருந்த ரூ 15500 கோடி கடனை திரும்ப செலுத்த முடியாததால், ஏர்செல் நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் ஒன்றரைக்கோடி வாடிக்கையாளர்கள் ஏர்செல் சேவையைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
BY MANJULA | FEB 28, 2018 5:31 PM #AIRCEL #TAMILNADU #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories